28ம் தேதி முரசொலி பொற்கிழி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முரசொலி அறக்கட்டளை சார்பில் வருகிற 28ம் தேதி சென்னையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது.
முரசாலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல் துறை பிரமுகர்களுக்கு பொற்கிழியும், விருதும் வழங்கப்படுகிறது.
இந்த விழா வருகிற 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். கருணாநிதி பொற்கிழிகளையும், விருதுகளையும் வழங்குகிறார்.
இந் நிகழ்ச்சியின்போது கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த கணபதி ஸ்தபதி, எழுத்தாளர் கோவி.மணிசேகரன்,திரைப்பட இயக்குநர் கே.சொர்ணம் ஆகியோருக்கு பொற்கிழி, தலா ரூ. 1 லட்சம், விருது ஆகியவை வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications