போலீஸ் ரெய்ட் பயம்: சங்கர மடம் மூடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
போலீஸ் ரெய்டு நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரம் சங்கரமடம் மூடப்பட்டுவிட்டது.
விஜயேந்திரர் கைதுக்குப் பிறகு சங்கர மடம் பதட்டமாக காணப்படுகிறது. நேற்று காலை சங்கர மடம் முன் வெளிநாடுகளைச் சேர்ந்த50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மடத்திற்கு குழுமி விஜயேந்திரர் கைதைக் கண்டித்த கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது. உடனடியாக கலைந்துசெல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சங்கர மட பக்தர்கள் மடத்திற்கு உள்ளே சென்றனர்.
இருப்பினும் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியில் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால், மடத்திற்குள் போலீஸார் நுழைந்து விடலாம் என்ற அஞ்சிய மட நிர்வாகிகள் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி பூட்டைப்போட்டு பூட்டி விட்டனர்.












Click it and Unblock the Notifications