ஜெவிடம் இன்று ரூ. 15 கோடி நிதியளிப்பு
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி வழங்குமாறுஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வரிடம் நிதியுதவி குவிந்து வருகிறது.
இன்று மட்டும் ரூ. 15.70 கோடி அளவுக்கு நிதி சேர்ந்தது. தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் சார்பில்வழங்கப்பட்ட ரூ. 11.18 கோடி நிதியை மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
வீட்டு வசதி வாரிய ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக ரூ. 23.76 லட்சம் நிதியை அத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சார்பில் ரூ. 11.22 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ரூ.6 லட்சம் அளித்தார். நடிகர்கள்
ஸ்ரீகாந்த், வடிவேலு ஆகியோர் தலா ரூ. 1லட்சம், நடிகர் எஸ்.வி.சேகர் ரூ. 1.5 லட்சம் நிதியளித்தனர்.













Click it and Unblock the Notifications