ஜெயேந்திரர் கைதில் சர்வதேச சதி: ஆர்எஸ்எஸ்

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்:

Jeyandrarசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் சர்வதேச சதி உள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்சுதர்சன் தெரிவித்தார்.

நாக்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் வீர சவர்க்கார் ஒரு அற்புதம் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, அவர் பேசியதாவது:

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நடவடிக்கைகளில் சர்வதேச சதி உள்ளது. புனிதத் தலங்களையும், ஆன்மீகத் தலைவர்களையும்அவமதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

உலகில் உள்ள முக்கிய சமூகங்களில் இந்து மதமும் ஒன்றாக விளங்குவதால், இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச முக்கியத்துவம்கிடைத்துவிடுகிறது. எனவே இத்தகைய சதி நடவடிக்கைகளுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று திரள வேண்டும்.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மக்களிடம் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நான் மறுக்கிறேன்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யரும், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியும், ஆங்கிலேயர் பாணியில்சவர்க்காரின் பங்களிப்பு குறித்து முரணான தகவல்களை அளித்து குழப்பம் விளைவிக்கின்றனர்.

சவர்க்காருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் வரலாற்றுப் பூர்வமான உண்மைகளோ, அறிவுப்பூர்வமான வாதங்களோ இல்லை.சவர்க்காரின் புகழைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+