சுனாமி: மத்திய அரசிடம் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

The scene in Nagai
தமிழகத்தில் சுனாமி தாக்கிய பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய குழு, மத்திய அரசிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைசெயலாளர் ஸ்ரீவத்சவா தலைமையில் 10 பேர் கொண்ட மத்திய குழு தமிழகத்திற்கு வந்தது.

தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்த அவர்கள், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து அறிக்கை தயார் செய்தனர்.அதனை உள்துறை அமைச்சகத்திடம் அளித்தனர்.

இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய குழு தாக்கல் செய்த அறிக்கையை உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் குறிப்பிடும் நிவாரணஉதவிகளை நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கமிட்டி பரிசீலனை செய்யும்.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையிலான இந்த கமிட்டியில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சிவராஜ் பாட்டீல்மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிவாரணஉதவி குறித்து இந்த மாத இறுதியில் முடிடுெப்பார்கள்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 8.90 லட்சம் பேர் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,960 பேர் பலியானதாக மாநில அரசுதெரிவித்துள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் 412 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு ரூ.4,800 கோடி நிதி மற்றும் 54,000 டன் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ரூ.250 கோடி வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+