ஐஏஎஸ் தேர்வு வயது வரம்பை குறைக்க வைகோ எதிர்ப்பு
சென்னை:
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பைக் குறைக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாற்றங்கள் செய்ய அமைக்கப்பட்ட கோத்தா தலைமையிலான குழு இந்தத் தேர்வுஎழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 4 ஆண்டுகள் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இத் தேர்வுகள் வங்கிப் பணி, மாநிலப் பணித் தேர்வுகளுக்கு முன் மாதிரியானது. அதனால் இதை மற்ற ஆணையங்களும் பின் பற்றி முடிவுஎடுக்கலாம். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர் பாதிக்கப்படுவர்.
இந்தத் தேர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தால் 29 வயது முதல் 35 வயது வரையுள்ள மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வு எழுதமுடியாது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் இத் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
அவர்களில் 75 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்கள். வயது வரம்பைக் குறைத்து, வேலை வாய்ப்பிற்கான வாசலின் கதவுகள்அனைத்தையும் மூடிவிட்டால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படைவார்கள். எனவே கோத்தா குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டாம் என்று மதிமுக கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விஜயேந்திரர் கைது: வைகோ சந்தேகம்
விஜயேந்திரர் கைது தொடர்பாக வைகோ வெளியிட்ட இன்னொரு அறிக்கையில்,
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திற்குள்ளாகவிஜயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நேரமும், சூழ்நிலையும் பல்வேறு விதமான யூகங்களுக்கு இடமளிக்கிறது என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications