For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயேந்திரரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Vijayendrarவிஜயேந்திரரை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்உள்ளார்.

இது திடீர் கைது என்பதால் விஜயேந்திரர் மாற்று உடைகள் மற்றும் பூஜைப் பொருட்களை எடுத்து வரவில்லை. அவற்றை சங்கர மடஊழியர்கள் பின்னர் சிறைக்கு எடுத்து வந்தனர். அவர்கள் யாரும் விஜயேந்திரரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சிறை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். அதேபோல் வழக்கறிஞர்கள் வைத்தியநாதன்,பாலசுப்பிரமணியம், ரவி அனந்தபத்மநாதன் ஆகியோருக்கும் விஜயேந்திரரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

சமதா கட்சியின் முன்னாள் மாநலத் தலைவர் நந்தகுமார், சங்கர மட நர்வாகிகள், பக்தர்கள் என திரளான பேர்சிறை முன் திரண்டிருந்தனர். ஆனால் விசாரணைக் கைதிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே சந்திக்கமுடியும் என்றும், மற்ற நாட்களில் நீதிமன்றத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்ற பிறகே சந்திக்க முடியும் என்றும் சிறை அதிகாரிகள்கூறிவிட்டனர்.

இதனால் யாருக்கும் விஜயேந்திரரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X