விழி நீரை வழித்தெறிந்து..: கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உணர்ச்சிப் பிரவாகமான பொங்கல் வாழ்த்துச் செய்தி:
வதந்திகளால் உயிர் துறந்து உன் போன்றோர் வாஞ்சைமிகு வாழ்த்துக்களால் பிழைத்தெழுந்துள்ள உன் அண்ணன், திராவிடர் தம் மரபுவழித் திருநாளாம் இப்பொங்கல் நாளில் பொங்கிடும் விழி நீரை விரல்களால் வழித்தெறிந்தவாறு இந்த மங்கல வாழ்த்து மடலைஎழுதுகின்றேன்.
கடந்த டிசம்பர் 26ம் தேதியின் அவலச் செய்தியாக வெடித்தபோது, அப்போலா மருத்துவமனைக்கு நானும் தூக்கிச் செல்லப்படுகிறேன்.
உடலில் தாக்கிய வலி, வேதனை, திடீர் நோயை விட என் உள்ளத்தில் தாக்கி உணர்விழக்கச் செய்த சுனாமி விளைவு படைத்திட்ட விபரீதம்,கடல் அலைகளின் மீதெல்லாம் உயிரற்ற உடல்களை- கட்டடங்களின் இடிபாடுகள்- கப்பல்கள் கவிழ்ந்ததென்ன, ஓடங்கள் மிதந்ததென்ன,தோணிகள் தொலைந்ததென்ன, தொகை தொகையாய் மனித உயிர்களை அலை அலையாய் வந்து இயற்கை விழுங்கிய கொடுமைதான்என்னே!
துயர் துடைக்க மத்திய-மாநில அரசுகளிடம் நிதி குவிந்தால் மட்டும் போதாது. அதனை ஆக்கபூர்வமானப் பணிகளுக்கு உரிய முறையில்ஈடுபடுத்த அரசுகள் முன் வர வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்து கொண்டு, அதற்குள் இந்தப் பூமியும் கடலும்இணைந்து நடத்திய இயற்கைச் சதியின் கொடுமைக்கு உள்ளானவர்களுக்குப் புதுவாழ்வு வழங்கி முடித்து விட்டோம் என்று அறிவிப்பதேஇந்தப் பொங்கல் நாளில் உமியளவு பூரிப்பை நாம் உதடுகளின் இடுக்கில் உதயமாகச் செய்திடும்.
ஏழையாகி விட்ட மீனவர்கள், உழவர்களின் கண்ணீர் துடைக்கும் கைகளுடன் இந்தக் கையும் என்றும் இணைந்திருக்குமெனஉழைப்போர்க்கு வணக்கம் சொல்லி, கவலைக் கருமேகத்துக்கிடையே களிப்பு மழைத் துளியாக இந்தப் பொங்கல் வாழ்த்தினைக் கருதிடுகஎன வேண்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications