அரசு பஸ்-வேன் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
பெங்களூர் அருகே உள்ள சிக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்த 12 பேர் வேன் மூலம் சபரிமலை சென்றிருந்தனர். அங்கு தரிசனம்முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அவர்களது வேன் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியது. இதில்வேனில் பயணம் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 8 பேரும் படுகாயமடைந்தனர்.
அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் வரதராஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications