வங்கி கணக்கு முடக்கம்: பக்தர்களின் உதவி குவிகிறது
கலவை:
சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், கலவையில் உள்ள ஜெயேந்திரருக்காக அரிசி உள்ளிட்ட பல்வேறுபொருட்களை பக்தர்கள் ஏராளமான அளவில் வழங்கி வருகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன. இதனால் சங்கர மடத்தின் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவரதுசாப்பாடு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் பக்தர்கள் ஏராளமான அளவில் உதவி வருகின்றனர்.
அரிசி, பருப்பு, நெய், வாழைப்பழம், ஆப்பிள் என பல்வேறு பொருட்களை பக்தர்கள் ஏராளமான அளவில் கொடுத்துவருகின்றனர். இதனால் கலவை மடத்தில் பக்தர்கள் வழங்கும் பொருட்கள் குவியத் தொடங்கியுள்ளன. பக்தர்களின் இந்தஉதவிக்கு கலவை மட நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.