இந்தோனேஷியாவில் பலி 1,15,229 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
![]() |
நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தோனேஷியாவில் 1,15,229 ஆகஉயர்ந்துள்ளது.
சுனாமியால் தெற்கு ஆசியாவில் 1.57 லட்சம் பேர் பலியானார்கள். இதில் இந்தோனேஷியாவில் மட்டும் 1,10,229 பேர்பலியானார்கள்.
இந் நிலையில் சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் உல்ள காலங் என்னும் கிராமத்தில் 5,000 பேர் இறந்திருப்பதுதெரியவந்துள்ளது. இதனால் இந்தோனேஷியாவில் மொத்த பலி எண்ணிக்கை 1,15,229 ஆகவும், தெற்காசியாவில் 1.62லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் மேலும் 12,132 பேரைக் காணவில்லை. 925 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.6,03,518 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இத்தகவலை அந்நாட்டு சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.













Click it and Unblock the Notifications