For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதிரவன், சின்னா குண்டர் சட்டத்தில் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kathiravanசங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப் படையினர் 10 பேரில் கதிரவன், சின்னா உள்ளிட்ட 4 பேருக்கு குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கான சம்மன் வழங்கப்பட்டது.

சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையைச் சேர்ந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படைத் தலைவன்அப்புவும் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந் நிலையில் கூலிப் படையினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக மாவட்டஆட்சித் தலைவரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கதிரவன், சின்னா, மாட்டு பாஸ்கர், அனில்குமார் ஆகிய நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கான சம்மனை காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சென்னை மத்திய சிறைக்கு சென்று நான்கு பேரிடமும் கொடுத்தனர்.

இன்று அம்பி என்ற அம்பிகாபதி உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களும் விரைவில் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X