கர்நாடகத்துக்கு 140 டிஎம்சி போதும்: தமிழகம் கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கர்நாடகத்திற்கு 140 டிஎம்சி தண்ணீர் போதும் என்றும், தனது பாசனப் பகுதியை 8.5 லட்சம் ஏக்கராக கர்நாடம் குறைக்க வேண்டும் என்றும்காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசின் வாதம் இந்த மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் முதல்கர்நாடகத்தின் வாதம் தொடரும். நடுவர் மன்றத்தின் இறுதி அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் நடுவர் மன்றத்தில் தமிழக அரசு அண்மையில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில்,

காவிரி டெல்டா பகுதிகளில் தனது பாசனப் பகுதியின் பரப்பை கர்நாடம் விரிவாக்கிக் கொண்டே போகிறது. இதை கர்நாடகம் நிறுத்தவேண்டும். அம் மாநிலத்துக்கு 140 டிஎம்சி போதும். தனது பாசனப் பரப்பை 8.5 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் ஒரு பருவத்துக்கு கர்நாடகம் மொத்தமாக அணைக்கட்டுகளில் இருந்து 5-6 அடி நீரை பயன்படுத்துவதாகவும், அதை 3-4அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. கர்நாடகம் 48,000 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட அனுமதிக்கக் கூடாதுஎன்றும், கோடை சாகுபடியை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஒரு ஆண்டில் காவிரியில் கிடைக்கும் 740-834 டிஎம்சி தண்ணீரில் 566 டிஎம்சி தேவை என்றும் தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால்தமிழகத்திற்கு 70 டிஎம்சி தண்ணீரே போதும் என்று கர்நாடகம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாசனப் பரப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் கர்நாடகம், அதற்கு காவிரி நீரைத் திருப்பிவிட்டுவிட்டு தமிழகத்துக்கு உரிய நீர் தரமறுத்து வருகிறது. இதனால் தான் பாசனப் பரப்பைக் குறைக்குமாறு தமிழகம் கோரியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+