தொலைதொடர்பு தொழில்நுட்பம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்
சென்னை:
ஜப்பான், மலேசியா நாடுகளுக்கு ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் நாளை செல்கிறார்.
தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறையில் இவ்விரு நாடுகளுடான ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் வகையில் அவரது இந்தப் பயணம்அமைகிறது.
இன்டர்நெட் அடிப்படையிலான தகவல் தொடர்பு, நெட்வொர்க் உருவாக்கம், அதி விரைவு மற்றும் அதிக அலைவரிசை கொண்டசெல்போன் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஜப்பானும் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
ஜப்பானின் ஹார்ட்வேர் மற்றும் இந்திய சாப்ட்வேரை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன.
ஜப்பான் தொலை தொடர்புத் துறை அமைச்சர் அசோ தரோவுடன் இது குறித்து மாறன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.
தகவல் மற்றும் தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அம்சங்கள் குறித்து இரு தரப்பும் விவாதிக்கின்றன. மேலும்தொலைதொடர்பு குறித்த கருத்தரங்கத்திலும் மாறன் உரையாற்றுகிறார்.
பின்னர் தொலைதொடர்பு சாதன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் இந்தியாவில் முதலீடு செய்வதுதொடர்பாக விவாதிக்கிறார்.
இதனையடுத்து மலேசியா செல்லும் மாறன், அங்கு தொலைதொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ லிம் கெங் ஏய்க்கைச் சந்தித்துப்பேசுகிறார். அதேபோல் தொழிலதிபர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.