ஜெ- உலக வங்கி குழு சந்திப்பு
சென்னை:
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக் குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சுனாமி நிவாரணநிதியுதவி குறித்து விவாதிக்கின்றனர்.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக உலக வங்கியின் இந்திய இயக்குனர்மைக்கேல் கார்ட்டர், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் லூயிஸ் டி ஜோங்க் ஆகியோர் அடங்கிய குழுநாகை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம், கீச்சாங்குப்பம், புதுப்பேட்டை, சிங்காரத்தோப்பு, நாகை மாவட்டம்அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட இக் குழுவினர் இன்று சென்னையில் முதல்வர்ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
என்ன மாதிரியான உதவிகளை தமிழக அரசு எதிர்பார்க்கிறது, கடனுதவி எவ்வளவு தேவைப்படும் என்பதுஉள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்வருடன் இரு சர்வதேச வங்கிகளின் இயக்குனர்களும் விவாதிக்கவுள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு ஜெயலலிதாகோரிக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்றும்கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளிடம் ஜெயலலிதா முக்கியமாகவிவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.