சீர்திருத்த பள்ளி: தப்பிய 4 சுள்ளான்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை தாக்கி விட்டு 4 சிறுவர்கள் துணிகரமாக தப்பியுள்ளனர்.
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் சார்பில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பள்ளியிலிருந்து செல்வம், வைரவன் உள்ளிட்ட 4 சிறுவர்கள் நேற்றிரவு தப்பி ஓடி விட்டனர். பள்ளியின் கேட்டைத் திறந்து வெளியேவந்த இவர்களைப் பார்த்து விட்ட காவலாளி நான்கு பேரையும் பிடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது காவலாளி போர்த்தியிருந்த போர்வையாலேயே அவரது கழுத்தைச் சுற்றி சரமாரியாகத் தாக்கி விட்டு நான்கு சிறுவர்களும்துணிகரமாக தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications