விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை உக்கடம் பகுதியில் கழிவு நீர் கிடங்கில் விஷ வாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பைபாஸ் சாலை ஜி.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீர் கிடங்கு உள்ளது. கோவை நகர வீடுகள், நிறுவனங்களின்கழிப்பிடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் இங்கு தான் கொட்டப்படுகின்றன.

இந்த பண்ணைக்கு இன்று பிற்பகலில் டேங்கர் லாரி ஒன்று வந்து கழிவுநீரை கொட்டியது. கழிவு நீர் முழுவதும் கொட்டப்பட்ட பின்னர்டேங்கருக்குள் சேர்ந்திருந்த மண்ணை அகற்ற முருகன் என்ற பாப்பான் (வயது 28) என்ற தொழிலாளி டேங்கர் மூடியைத் திறந்தார்.

அப்போது டேங்கருக்குள் இருந்து வந்த விஷ வாயு தாக்கியதில் முருகன் மயங்கி விழுந்தார். அவர் டேங்கருக்குள் விழுந்து விட்டதால்அவரைக் காப்பாற்றுவதற்காக சண்முகம், நாகராஜ் (இருவருக்கும் வயது 35) ஆகியோர் முயன்றனர். அப்போது அவர்களையும் விஷ வாயுதாக்கியது.

இதில் 3 பேரும் மயங்கி டேங்கருக்குள் விழுந்தனர். உடனடியாக தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

துணை ஆணையர் நாகராஜன், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேரும் இறந்து விட்டனர்.

இறந்த 3 துப்புறவுத் தொழிலாளர்களும் உக்கடம் மாநகராட்சி காலனியைச் சேர்ந்தவர்கள். முருகனுக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன்உள்ளனர். சண்முகத்திற்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+