ஜெயேந்திரர் சுற்றுப் பயணத்துக்கு ஆர்எஸ்எஸ் முயற்சி
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசாலும், தமிழக காவல்துறையாலும் இழைக்கப்பட்டஅநீதியை மக்களுக்கு விளக்கும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றுஜெயேந்திரருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 15ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் தலைமையில், அனைத்துஇந்து இயக்கங்களும் இணைந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்என்பதை விளக்கி நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளோம்.
ஜெயேந்திரர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் என்னென்ன கொடுமைகளைஅனுபவித்தார், காவல்துறையால் என்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று ஜெயேந்திரரைக் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு சாதகமான பதிலை அவர் கொடுத்துள்ளார்.
ஜெயேந்திரர் மீதான அனைத்து வழக்குகளையும் தமிழகத்திற்கு வெளியே மாற்ற வேண்டும் என்றார்.
பிகார், ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தவுள்ள நிலையில் இப்போதுவட நாட்டில் ஜெயேந்திரர் சுற்றுப் பயணம் செய்வது பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கும் என ஆர்.எஸ்.எஸ்.கருதுகிறது.
இதனால் தான் அவரை சுற்றுப் பயணம் செய்ய அந்த அமைப்பு அழைப்பதாகத் தெரிகிறது.