சம்மனை எதிர்த்து விஎச்பி வேதாந்தம் வழக்கு
சென்னை:
காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் அனுப்பிய சம்மன் உத்தரவை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்மாநிலத் தலைவர் வேதாந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கூறி வேதாந்தத்திற்கு காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால் இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை என்று கூறி அதைஏற்க மறுத்து விசாரணைக்கு செல்லவில்லை வேதாந்தம்.
இந் நிலையில் போலீஸார் அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமாக இருப்பதால் இதை ரத்து செய்ய வேண்டும்என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் வேதாந்தம்.
அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் இந்த சம்மன் முறைப்படிவினியோகிக்கப்படவில்லை. மேலும், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் பணிபுரியும் விஷ்ணு காஞ்சி காவல்நிலைய எல்லைக்குள் நான் வசிக்கவில்லை.
நான் வேறு இடத்தில் வசிக்கிறேன். எனவே எனக்கு சம்மன் அனுப்ப காஞ்சிபுரம் தனிப்படை போலீஸுக்குஉரிமை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.