For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவனின் கண்ணை பறித்த ஆசிரியை!

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

மாணவன் மீது ஆசிரியை எறிந்த பேனா, அவனது கண்ணைக் குத்திக் கிழித்தது.

இந்த சம்பவம் நடந்தது கேரள மாநிலம் கட்டக்கடா அருகே உள்ள அரசு பள்ளியில். இப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்அமீன். அரபி மொழி வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அமீன் பாடத்தைக் கவனிக்காமல் இருந்துள்ளான்.

இதையடுத்து அவனது கவனத்தைக் கவர, அந்த ஆசிரியை பேனா ஒன்றை அமீன் மீது எறிந்தார். அந்தப் பேனா அமீனின் இடதுகண்ணைக் குத்திக் கிழித்தது. 4.5 மி.மீ அளவுக்கு கண்ணில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து அமீன் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். பெரிய காயமாக இருந்ததால், பின்னர் அறுவைசிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள கண் மருத்துவமனையில் அமீன் சேர்ககப்பட்டுள்ளான்.

அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அமீனுக்கு அந்தக் கண்ணில் மீண்டும் பார்வை கிடைக்குமா என்பதை இப்போது கூறமுடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X