விஜயேந்திரருடன் மகாதேவ அய்யர் பேச எதிர்ப்பு
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரை சந்தித்துப் பேச சங்கர மட புதிய மேலாளர் பொள்ளாச்சி மகாதேவ அய்யர் முயன்றபோது அதற்கு வழக்கறிஞர்கள்எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் காவல் முடிந்து விஜயேந்திரர் நேற்று மாலை காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றஅறையில் நின்றிருந்த விஜயேந்திரரை அணுகி மகாதேவ அய்யர் பேச முயன்றார்.
அப்போது உள்ளே இருந்த வழக்கறிஞர்கள் மகாதேவ அய்யரை வெளியேறுமாறு கூறினார்கள். இதையடுத்து சரி, சரி என்றுகூறியபடி மகாதேவ அய்யர் வெளியே வந்து விட்டார்.
பின்னர் நீதிமன்ற விசாரணை முடிந்ததும், விஜயேந்திரருடன் சங்கர மட மேலாளர் பேச அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிஉத்தமராஜிடம் சங்கர மட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நீதிபதி ஏற்று அனுமதி வழங்கினார்.
இதையடுத்து வெளியே வந்த விஜயேந்திரருடன் மகாதேவ அய்யர் சிறிது நேரம் பேசினார்.












Click it and Unblock the Notifications