பிப். 1 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் வாக்காளர் திருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகளைச் சேர்ந்த 37 சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான முறையில் வாக்காளர் பட்டியல்திருத்தப்படும். வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் பட்டியல் சரி பார்க்கப்படும்.
தமிழகத்தின் இதர பகுதிகளில் (சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர) சுருக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தம்மேற்கொள்ளப்படும். இந்தப் பகுதிகளில் கதவு எண் சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதி முதல்வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications