3ம் தேதி வரை ஜெயேந்திரரை கைது செய்ய தடை!
சென்னை:
திருகோஷ்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர்தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைதான ஜெயேந்திரை மூன்றாவதாக இந்த வழக்கிலும் கைது செய்ய தமிழக போலீசார்திட்டமிட்டனர்.
இதில் சங்கரராமன் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற்றுவிட்ட ஜெயேந்திரர், மாதவன் வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு வழக்கறிஞர் கணேஷ்,
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்குத் தரப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளைத் திருத்தக் கோரியும், அவரை வடமாநிலங்களில் தங்கியிருக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வரும் வரை இந்த மனுமீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதி மாதவன், விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை மாதவன் தாக்கப்பட்ட வழக்கில்ஜெயேந்திரரைக் கைது செய்யவும் தடை விதித்தார்.