அப்ரூவராகிறான் ரவி சுப்பிரமணியம்!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட ரவிசுப்பிரமணியம் அப்ரூவராக மாற முடிவுசெய்துவிட்டான். இத் தகவலை அவனே இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அறிவித்தான்.
இந்தக் கொலையில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவன் காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம். சங்கர மடத்தின்கணக்கில் இருந்து இவனது கட்டட நிறுவனத்துக்கு தரப்பட்ட ரூ. 15 லட்சம் செக், பணமாக மாறி கொலையாளிகளைஅடைந்துள்ளது என்கிறது போலீஸ்.
நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து, போலீசுக்கு கண்ணாமூச்சி காட்டி, கடைசியில் கேரளத்தில் குருவாயூரில் வைத்து கைதுசெய்யப்பட்டான் ரவி.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட இவன் சங்கர மடம், பெண் விவகாரங்கள் குறித்தும் பல விஷயங்களை போட்டுஉடைத்திருக்கிறான்.
இந் நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவி, இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு அப்ரூவர்ஆக விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தான்.
இந்த வழக்கில் இது மிக முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications