கடலூரில் கடல் கொந்தளிப்பு!
கடலூர்:
கடலூர் பகுதியில் கடலில் மீண்டும் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. கடலோரத்தில்வசிக்கும் பலர் தங்களது வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
ஆனால், கடலூர் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை, எனவேபொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல்பிரிவு விளக்கமளித்துள்ளது.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரணப் பணிகள் நடந்துவரும் நிலையில் இன்று கடலில் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற அச்சம் வேகமாக பரவியதால் மக்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜீப்புகளில் சென்று சுனாமி வராது, பயப்படத் தேவையில்லை என்று மைக் மூலம் அறிவித்துவருகின்றனர்.
இருப்பினும் தேவானம்பாட்டினம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவோர் தங்களது வீடுகளை காலி செய்து வேறுஇடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
பூகம்பவியல் துறை விளக்கம்!
இதற்கிடையே, கடலில் சுனாமி அலைகள் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன் பூகம்பவியல் பிரிவு இயக்குனர் ராவ் கூறுகையில்,
இந்தியா மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்தில் எந்தவித பூகம்பமோ, நில அதிர்வுகளோபதிவாகவில்லை.
ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது 7க்கு மேல் பதிவானால்தான் சுனாமி குறித்து அச்சப்படலாம். ஆனால் கடந்த 2மணி நேரத்தில் எந்தவித நில அதிர்வும் பதிவாகவில்லை. எனவே கடலூர் உள்பட தமிழகத்தின்கடலோரப்பகுதிகளில் சுனாமி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.
ஆனாலும் கடலில் கடும் காற்று காரணமாக கொந்தளிப்பு காணப்படுவதை சுனாமி அலைகள் எனக் கருதி மக்கள் வெளியேறுவதாகத்தெரிகிறது.
இந்திய பெருங்கடலில் நேற்றிரவு 9.30 மணிக்கு 5.2 ரிக்டர் என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு












Click it and Unblock the Notifications