சுனாமி: ஆர்ப்பாட்டம் இல்லாமல் குடியரசு தின விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The scene in Nagai

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவின் அடிப்படை நிகழ்ச்சிகளான கொடியேற்றம் உள்ளிட்டவற்றை மட்டும் நடத்தவும் கலை நிகழ்ச்சிகள்,கொண்டாட்டங்கள் போன்றவற்றை ரத்து செய்யவும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மரபுப்படி மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே தேசியக் கொடியை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஏற்றிவைப்பார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடக்கும்.

வீர சாகசம் புரிந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குவார்.

இதைத் தொடர்ந்து வழக்கமாக நடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

மாவட்டத் தலைநகர்களில் கலெக்டர்கள் தேசியக் கொடியேற்றி வைப்பதோடு குடியரசு தின விழா முடிவடையும். அங்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்காது.

டெல்லியில்..

இதற்கிடையே டெல்லியில் ஜனாதிபதி முன் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்றம், முப்படைகளின் அணிவகுப்புஆகியவற்றின் நேரத்தை 45 நிமிடங்களாக சுருக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+