இளையவருக்கு கழுத்து வலி: சிறையில் ஆயுர்வேத சிகிச்சை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரருக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளதால், சிறையில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் அனுமதிகோரப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் முடிந்த காஞ்சி நீதிபதி உத்தமராஜன் முன் விஜயேந்திரர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது வழக்கறிஞர் சண்முகம்ஒரு கோரிக்கையை வைத்தார்.
விஜயேந்திரர் கழுத்து வலியால் அவதிப்படுகிறார். அவருக்கு சென்னை மத்திய சிறையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கஅனுமதி தர வேண்டும் என்றார்.
இது குறித்து சிறை அதிகாரிகளிடம் முறையிடுமாறு நீதிபதி கூற, இது முறையீடு அல்ல. நாங்கள் கோருவது அடிப்படை உரிமை.அடிப்படை மருத்துவ வசதியைத் தானே கோருகிறோம் என்றார் வழக்கறிஞர் சண்முகம்.
இதையடுத்து மருத்துவ சிகிச்சை குறித்து சிறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக போலீஸ் காவலில் உங்களை காவலர்கள் துன்புறுத்தினார்களா?, உடலில் காயம் ஏதும் உள்ளதா என நீதிபதி கேட்க,இல்லை என்று பதில் தந்தார் விஜயேந்திரர்.