புதுவையில் ராகுல்காந்தி
பாண்டிச்சேரி:
![]() |
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், எம்.பியுமான ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.அவரை காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, வசந்தகுமார். தாமோதரன் ஆகியோர் வரவேற்றனர். வசந்த்குமாருடன் ராகுல்காந்திதனியாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் குண்டு துளைக்காத காரில் அங்கிருந்து புதுவை புறப்பட்டுச் சென்றார்.
புதுவை வந்த ராகுல் காந்தியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர்வரவேற்றனர். பின்னர் புதுவையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களைசந்தித்து ஆறுதல் கூறினார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டதற்காக முதல்வர் ரங்கசாமியை ராகுல்காந்தி பாராட்டினார்.
பின்னர் அவர் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றார். நாளை காரைக்கால் பகுதிக்குச் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளைப் பார்வையிடவுள்ளார் ராகுல் காந்தி. பின்பு காரைக்கால் சனீஸ்வரன் கோயில் சாமி கும்பிடுகிறார். மாலையில்சென்னை திரும்பி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.













Click it and Unblock the Notifications