For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவர் ஆகிறார் ரவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Ravi ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ரவிசுப்ரமணியம் அப்ரூவர் ஆக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்னை மந்தைவெளியில் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கிலும் ஜெயேந்திரர்,சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவிசுப்ரமணியம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆனதுபோல இந்த வழக்கிலும் அப்ரூவர் ஆக ரவி சுப்ரமணியம் ஒத்துக்கொண்டுள்ளதாகத்தெரிகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் இரண்டு வழக்கிலும் குறைந்தபட்ச தண்டனையுடன் ரவி சுப்ரமணியம்

தப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த மாத இறுதியில் ஆடிட்டர் வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகஎஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் குற்றப்பத்திக்கை

தயாராகி வருகிறது. இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ராதாகிருஷ்ணன் வழக்கில் அனைத்துக்குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட விட்டனர் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X