ரகு, சுந்தரசே அய்யரும் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியான சுந்தரசே அய்யரும், நான்காவது குற்றவாளியான ரகுவும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 25 பேரில் கூலிப் படையைச் சேர்ந்த 8 பேர் ஏற்கனவே குண்டர்சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் ரகுவும், சுந்தரேச அய்யரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரையும் சந்தித்து தனிப்படை போலீஸ்அதிகாரிகள் இன்று வழங்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications