For Daily Alerts
Just In
சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சிக்கியது. இதன் மூலம் ரயில் நிலையத்தை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியேறும் வழி அருகே உள்ள ஆண்கள் கழிப்பறையில் மர்மப் பை ஒன்று கிடந்தது.இது குறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையைப் பிரித்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பாஸ்பரஸ், கந்தகம்,டெட்டனேட்டர், ஒயர், சேப்டி பீஸ் ஆகியவை இருந்தன. அவற்றை தண்ணீர் பக்கெட்டில் போட்டு வைத்தனர்.
இந்த வெடிகுண்டு பொருட்கள் மூலம்
சென்டிரல் ரயில் நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
chennai tamil nadu news summon kanchi sankarachariyar vijayendrar appu tn seshan kanchi mutt ravi subramaniam
Story first published: Sunday, January 23, 2005, 5:30 [IST]