For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீநிவாச்சார் உடலில் ஆல்கஹால்: பிரேத அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

srinivasatcharya காஞ்சி உத்தராதி மட மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மது அருந்தியிருந்ததாக அவரது பிரேதப் பரிசோதனைஅறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநிவாச்சார் கடந்த 19ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள்அமைக்கப்பட்டன.

இந் நிலையில் ஸ்ரீநிவாச்சாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. அது குறித்து போலீஸார் நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்ரீநிவாச்சார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மது அருந்தியிருக்கிறார். அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது.

முதலில் அவரது தலை தாக்கப்பட்டுள்ளது. பின்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது.

விசாரணையில் மடத்தின் சார்பில் வாங்கப்பட்ட நிலம் ஸ்ரீநிவாச்சார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொலை நடந்த தினமன்று மடத்தில் தங்கியிருந்த ராமன்ஜி, இந்தி மட்டுமே பேசுபவராக இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதுசிரமமாக இருக்கிறது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின், தற்போது ஸ்ரீநிவாச்சாரின் உடல் செங்கல்பட்டு மருத்துக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் உடல் வைக்கப்படும் என்று கூறினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X