For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நானும், திருமாவும் இனி பிரிய மாட்டோம்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

என்னையும், திருமாவளவனையும் இனி யாராலும் பிரிக்க முடியாது, நாங்கள் இனி பிரிய மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறினார்.

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை தொடர்பானமாநாடு நடந்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்சேதுராமன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராமதாஸ் அத்வாலே உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், திருமாவளவனும், நானும் 4 ஆண்டுகளாக பிரிந்திருந்தோம். இனி மேல் பிரிய மாட்டோம்,இணைந்தே இருப்போம். இணைய மாட்டோம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் எதிர்பாராமல் நாங்கள் இணைந்ததும் இப்போதுவயிறு எரிகிறார்கள்.

இனி எந்த சக்தியும் எங்களைப் பிரிக்க முடியாது. இணைந்தே செயல்படுவோம். இரட்டை வாக்குரிமை தொடர்பாக மத்திய அரசின்கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார்.

திருமாவளவன் பேசுகையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய தலித் ஊராட்சிகளில்கடந்த 8 ஆண்டுகளாக தேர்தலை நடத்த முடியவில்லை. அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உடனடியாக ராஜினாமா செய்யும் நிலைஉள்ளது.

இந் நிலையைத் தவிர்க்கத்தான் இரட்டை வாக்குரிமை கேட்கிறோம். அது இருந்தால் இந்த நிலை இருக்காது. தலித் மக்களுக்கு அரசியல்அதிகாரம் பெற இரட்டை வாக்குரிமை தேவை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X