தில் பாண்டியனுக்கும் குண்டாஸ்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளாக ஆஜரான தில் பாண்டியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுந்தரேச அய்யர், ரகு,கதிரவன், ரஜினி என்ற சின்னா, அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரம், மாட்டு பாஸ்கர், அனில்குமார், குமார், அனந்தகுமார் ஆகியோர்.

அப்பு அப்ரூவர் ஆவதற்காக போலீஸார் காத்துள்ளனர். அப்ரூவர் ஆகாவிட்டால் அவர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.இதேபோல தில்பாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் மீது அடுத்தகட்டமாக குண்டர் சட்டம் பாயும் எனத் தெரிகிறது.

தில் பாண்டியனும், செந்தில்குமாரும் போலி குற்றவாளிகள் ஆவர். இவர்கள் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்.இவர்களில் தில் பாண்டியன், சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தில் பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் துப்பு துலங்கி ஜெயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரும்பிடிபட்டனர்.

தில் பாண்டியன், செந்தில்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசனிடம்போலீஸார் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விரைவில் இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+