For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலவை: குவியும் பக்தர்கள்- தினமும் கலெக்ஷன் ரூ. 20 லட்சம்!!

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

Jeyandrar கடந்த 14 நாட்களாக கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சுமார் 50,000 பேர் சந்தித்து ஆசி பெற்றுள்ளதாக காஞ்சி மடத்தின்நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இவர்களில் பல விவிஐபிக்களும் அடங்குவர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் நிதி நெருக்கடியில் மடம் சிக்கியிருப்பதாகக்கூறப்பட்டாலும், ஜெயேந்திரரிடம் கலவையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 20 லட்சம் வரை காணிக்கை அளிக்கப்படுவதாக அந்தமடத்தை கண்காணித்து வரும் உளவுப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயேந்திரர் தங்கியுள்ள அறையில் இரண்டு திரைகள் போடப்பட்டுள்ளன. காணிக்கைகளுடன் பக்தர்கள் வந்தால் இரண்டு திரைகளும்விலக்கப்பட்டு அவர்களை ஜெயேந்திரர் சந்திக்கிறார். மற்றபடி சும்மா வருபவர்களுக்கு ஒரு திரைக்குப் பின்னால் இருந்தபடி தான்ஜெயேந்திரர் ஆசி வழங்குகிறார்.

காணிக்கையாக வரும் நிதியைக் கொண்டு ஆசி பெற வரும் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல மடத்தின் பிற செலவுகள் கவனிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் மெளன விரதத்திலேயே இருக்கும் ஜெயேந்திரர் பக்தர்களுடன் பேசுவதில்லை. ஆனால், சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டவிஐபிக்கள் வந்தபோது அவர்களுடன் சில வார்த்தைகள் பேசியிருக்கிறார்.

தினமும் காலை 9.30 மணிக்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜையை நடத்துகிறார். காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், பகலில் 12.30 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் ஜெயேந்திரர் பக்தர்களை சந்திக்கிறார்.

பல வெளிநாட்டு பக்தர்களையும் கலவையில் காண முடிகிறது. சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X