சுனாமி நிதியில் ஆயுதம் வாங்கும் இலங்கை: புலிகள்
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக சர்வதேச நாடுகள் வழங்கிய நிவாரண நிதியைக் கொண்டு இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக்குவிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசு இதை மறுத்துள்ளது.
சர்வதேச நிதி மூலம் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதாகவும், இரானிடம் இருந்து ரூ.675 கோடிக்கு ஆயுதம் வாங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனிடம் பிரபாகரன் தெரிவித்ததாக புலிகள் ஆதரவுஇணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதை இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் தயா ரத்னாயகே மறுத்துள்ளார். அவர்கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்புத் தேவைக்காக ஆயுதம் வாங்குவது தொடர்பாக இரானுடன் சிறிது காலமாகவே பேசி வருகிறோம். இன்னும்ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. ஆயுதங்கள் வாங்குவது வழக்கமான நடவடிக்கைதான்.
ஆனால் ஆயுதம் வாங்க சுனாமி நிவாரண நிதி பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications