For Daily Alerts
Just In
விபத்தில் உயிர் தப்பிய அமைச்சர் வேலு
வேலூர்:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஆர்.வேலு சென்ற கார் மீது லாரி மோதியது.இதில் வேலு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அமைச்சர் வேலு, வாலாஜா பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கார் மூலம் நேற்றிரவுராணிப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அவரது கார் ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையிலிருந்து திரும்பும்போது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இதில் கார் லேசானசேதமடைந்தது. வேலு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் தனசேகரனை கைது செய்தனர்.
Story first published: Monday, January 24, 2005, 5:30 [IST]