இந்தோனேஷியாவிலும் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்
ஜகார்த்தா:
![]() |
இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் இன்று அதிகாலை மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதேனும்ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சுலவேசி தீவின் தலைநகர் பலூவிற்கு தெற்கே 16 கிமீ தொலைவில் அதிகாலை 3.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவில் 6.2 ஆக இது பதிவானது. இதைத் தொடர்ந்து அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் பகுதியிலும் சென்னையிலும் நில அதிர்வுகள்ஏற்பட்டன.
இது குறித்து இந்தோனேஷிய வானிலை மற்றும் நிலவியல் ஆய்வு மைய அதிகாரி சுடியோனோ கூறுகையில்,
இந்த நிலநடுக்கதினால் 8 கடைகள் சேதமடைந்துள்ளன. ஆனால் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 24 முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. இவை ரிக்டர் அளவில் 3 முதல் 4 வரையில் பதிவாயினஎன்றார்.
கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து (9.0 ரிக்டர்) இந்தோனேஷியாவில் தொடர்ந்து நில நடுக்கம்ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல கண்டத் திட்டுக்கள் இணையும் இடத்தில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால் அங்கு நில நடுக்கமும், எரிமலை வெடிப்புகளும்சகஜமானவை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications