சுனாமி நிவாரணத்தில் ஈடுபட்ட மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த கல்லூரிமாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாகஇறந்தார்.
திருவான்மியூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரில் படித்து வந்தார். சுனாமியால் பாதிக்கப்பட்டசிதம்பரம் அருகே உள்ள கடலோரப் பகுதிகளில் இவரும், சக மாணவர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றிரவு 7 மணியளவி" இந்தப் பணிகளை முடித்துக் கொண்டு சிதம்பரம் அருகே கில்லை என்ற இடத்தில் உள்ள குளத்தில் குளிப்பதற்காககார்த்திக்கும், அவரது நண்பர்களும் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்திதக் குளத்தில் மூழ்கினார்.
இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்தவர்களிம் மாணவர்கள் உதவி கோரினர். உடனடியாக குளத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.மயங்கிய நிலையில் கார்த்திக் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications