வீராணம் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராட்டம்
அரியலூர்:
புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து அரியலூர் பகுதியில் 65 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடையடைப்புப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுஅதன் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதுதவிர புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதற்கு அரியலூர், பெரம்பலூர் பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வீராணம் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக் கோரி அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட 65 கிராமங்களில் இன்றுவியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கருப்புக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.