மகாராஷ்டிரா: திருவிழா நெரிசலில் 45 பேர் பலி
சதாரா:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் பலியாயினர்.
வகி என்ற இடத்தில் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள மந்த்ராதேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவையொட்டி இன்றுஆயிரக்கணக்கானவர்கள் கூடியினருந்தனர்.
கோவிலின் நுழைவு வாயில் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததையடுத்து சிலருக்கு லேசான ஷாக் அடித்தது.
இதையடுத்து கூட்டத்தினர் சிதறி ஓட ஆரம்பித்தனர். நுழைவு வாயில் மிகக் குறுகலாக இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரை மீறிஒருவர் ஓட முயன்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுமாறி விழுந்தனர். அவர்கள் மீது ஏறி, மிதித்தபடிகூட்டத்தினர் சிதறி ஓடினர்.
இந்த நெரிசலில் மிதிபட்டும் மூச்சு திணறியும் 45 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் 50பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications