Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்கறிஞர்களுடன் கூட்டு:- மோசடி: நீதிபதி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

பொது மக்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு அதிக நிதி பெற்றுத் தர அரசு வழக்கறிஞர், எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன்கூட்டு சேர்ந்து மோசடி செய்த துணை நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு கையகப்படுத்தியற்கான நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் நிலம் தந்தவர்கள் கேட்டதைவிடவும்அதிகமாக நிதியைத் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டார் மாவட்ட முதன்மை சார் நீதிபதியான ஜஸ்டின் ஜார்ஜ்.

இதில் அரசுத் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், மனுதாரர்கள் அதிக தொகை கேட்டபோது அதை எதிர்க்கவில்லை.

இந் நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மனுதாரர்கள் கேட்டதைவிடவும் அதிக தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதில்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞருடன் அவர் கூட்டு சேர்ந்து மோசடி செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பக விநாயகம், சதாசிவம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய ஒழுங்குநடவடிக்கைக் குழு, துணை ஜட்ஜ் ஜார்ஜை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்தது.

இதை ஏற்று அவரை தலைமை நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ சஸ்பெண்ட் செய்தார்.

இந்த விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே பணி நீக்கம் செயயப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+