பள்ளியில் ஆர்எஸ்எஸ் ஆயுத பயிற்சியா?
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் பள்ளியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழையூத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள்கருத்து வேறுபாடுகள், ஜாதி, மத மோதல்கள் இல்லாமல் சகோதரத்துவத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந் நிலையில், தாழையூத்து மக்களின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சங்கர் நகரில்உள்ள பள்ளிக் கூடத்தில் பயிற்சி முகாம் என்ற பெரியல் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளனர்.
கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம் நடந்துள்ளது. ஆயிரம் பேருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அகிலஇந்திய பாஜக செயலாளர் இல.கணேசனும் கலந்து கொண்டது வருத்தம் தருகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர், முதலமைச்சர், கல்விஅமைச்சர், மத்திய கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கும் புகார்அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.