குடியரசு தினம்.. குஜராத்.. மீண்டும் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் கட்ச் வளைகுடாப் பகுதியில் உள்ள பூஜ் நகரில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களுக்கு முன்பும்இதேபோல குடியரசு தினத்தன்று தான் குஜராத்தில் இதே இடத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு 12.35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கோளில் இது 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரிய வரவில்லை.
4 வருடங்களுக்கு முன்பு இதேபோல் குடியரசுத் தினத்தன்று இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12,000க்கும் அதிகமானோர்உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications