வரவில்லை காவிரி நீர்: மூடப்படும் மேட்டூர்!
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அணை மூடப்படுகிறது.
அணை கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அன்று முதல் இதுவரை 122.55டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து அணையைமூட அதிகாரிகள் முடிவு செய்துள்ள்ளனர். வெள்ளிக்கிழமை (நாளை) காலை அணை மூடப்படுகிறது.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் காவிரியிலிருந்து கர்நாடகம் இதுவரை 195.62 டிஎம்சிதண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 158 டிஎம்சி தண்ணீரே மேட்டூருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications