ஜெயேந்திரரை விடுவிக்க கோரி கையெழுத்து இயக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

Jeyandrarஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் கைதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் 10 லட்சம் பேரிடம்கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அகில பாரத காஞ்சி காமகோடி பீடம் பக்தர் பேரவை சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.திருவண்ணாமலைக்கு வந்த இந்த பேரவையைச் சேர்ந்தவர்கள், கிரிவலத்திற்கு வந்த பக்தர்களிடம் கையெழுத்து வேட்டைநடத்தினர்.

இதுவரை 50,000 பேர் கையெழுத்திட்டிருப்பதாக கூறும் பேரவையினர், முதல்வர் ஜெயலலிதா கூறும் புகார்கள் முற்றிலும்தவறானவை என்பதை நிரூபிக்கவே கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் வழங்கப் போவதாக அவர்கள்தெரிவித்தனர்.

பிரமிட் நடராஜன் சந்திப்பு:

இந் நிலையில் கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன்,தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திருவொற்றியூர் நாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

சங்கரராமன் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து வேலூர் சிறையில் இருந்து விடுதலையானஜெயேந்திரர் கலவையில் தங்கியிருக்கிறார். அவரை தினமும் ஏராளமான பக்தர்களும் முக்கிய பிரமுகர்களும் சந்தித்துவருகிறார்கள்.

இந் நிலையில் அவரை திருவொற்றியூர் நாராயணன், பிரமிட் நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+