ஜெயேந்திரர்: வேலூர் சிறையிலும் சிபிஐ விசாரணை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jeyandrarசங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயேந்திரர் வேலூர் சிறையில் இருந்தபோது அவருக்கு செய்துகொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரிடம் சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சங்கரராமன் கொலைகுறித்தும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் சிபிஐ அதிகாரிகள் வேலூர் மத்திய சிறைக்கும் சென்றுள்ளனர். அங்கு ஜெயேந்திரருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புமற்றும் வசதிகள் குறித்தும் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கலவை, காஞ்சிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதை கோட்டை விட்ட மாநில உளவுத்துறைக்கு தமிழக அரசின் மேலிடம் டோஸ் விட்டதாகத் தெரிகிறது.

நிருபர்களை கண்காணிக்கும் உளவுத்துறை:

இதற்கிடையே ஜெயேந்திரர் தொடர்பாக செய்தி சேகரிக்கும் நிருபர்களைக் கண்காணித்து மேலிடத்திற்கு தகவல் அனுப்புமாறுமாநில உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சங்கரமடத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எந்தெந்த நிருபர்களுடன் பேசுகின்றனர் என்பதையும், அந்த நிருபர்கள்வேலை செய்யும் டிவி, செய்தித் தளம், பத்திரிகை குறித்தும், அதில் ஜெயேந்திரர் பற்றி வெளியாகும் செய்தி பற்றியும்உடனுக்குடன் மேலிடத்திற்கு உளவுத்துறையினர் தகவல் அனுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+