ஸ்ரீநிவாச்சார்: லை-டிடெக்டர் மூலம் விசாரணை
காஞ்சிபுரம்:
உத்திராதி மட மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கொலை வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் மடத்தின் மேலாளர் ராமன்ஜி உட்பட 4 பேரிடம்உண்மை அறியும் கருவி மூலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் உள்ள உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீநிவாச்சார்கடந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந் நிலையில் கொலை நடந்ததினத்தன்று மடத்தில் இருந்த ராமன்ஜி, பால்காரர் ராமு உட்பட 4 பேரிடம் போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் மோகனவேலு தலைமையிலான போலீஸார் வேனில்கொண்டு சென்றனர். அங்கு உண்மையைக் கண்டறியும் கருவியான லை-டிடெக்டர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு தமிழக போலீஸ் படை பீகார் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications