திருச்சியில் அழிக்கப்பட்ட ரூ.11 கோடி ஹெராயின்!
திருச்சி:
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று அழிக்கப்பட்டன.
10.92 கிலோ ஹெராயின், 98 கிலோ கஞ்சா மற்றும் மார்பின் ஆகியவை தனியார் இரும்பாலையில் உள்ள கொதிகலனில் போட்டுஎரிக்கப்பட்டதாக சுங்கத் துறை துணை ஆணையர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்தப் பொருட்கள் திருச்சி விமான நிலையம், தூத்துக்குடி, குளச்சல். தொண்டி மற்றும் அறந்தாங்கியில் கைப்பற்றப்பட்டவையாகும்.கடலோரப் பகுதிகளில் சுங்கத் துறை மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின்போது இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2001-02ம் ஆண்டில் 69.3 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இது தொடர்பாக 3 இந்தியர்களும், பல வெளிநாட்டவரும் கைதுசெய்யப்பட்டனர். அதற்கு அடுத்த வருடம் 36.9 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2003-04ம் ஆண்டின்போது 15.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வருடத்தில் கடந்த மாதம் 31ம் தேதி வரை 0.72கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 6 இந்தியர்களும், வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications