கலெக்டர்கள்- தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மத்திய துணைதேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.இதுகுறித்து கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் விசாரணை நடத்தினார். அப்போது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்நடந்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நரேஷ் குப்தா தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஏ.என்.ஜா ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள்கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக மதுரை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.அதைத் தொடர்ந்து கோவை, திருச்சி மண்டல மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications